Friday, April 19, 2024
Homeஇந்திய செய்திகள்பிறந்தநாள் கொண்டாட கேக் வாங்க சென்ற இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

பிறந்தநாள் கொண்டாட கேக் வாங்க சென்ற இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக் கொண்டு, ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

அதன் பின்னர் இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். பின் தகவலறிந்த விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டனர்.

பின்னர் முதலுதவிக்காக பரிசோதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடலும் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலைப் பார்த்த பெற்றோர்கள் கதறி கதறி அழுத காட்சி காண்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இந்தச் சம்பவம் அறிந்து வந்த அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட இருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments