தனது நணபர்களுடன் நோட்டன் பிரிட்ஜ், அபடீன் நீர்வீழ்ச்சிக்குச் (Aberdeen Waterfall) சென்று அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் முற்பகல் 11 மணியளவில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று அதிக நேர தேடுதலின் பின் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் பொகவந்தலாவை லின்ஸ்டட் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த 17 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.