Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்பாதுகாப்பு கமராக்களை செயழிலக்க செய்து கொள்ளை ! பல்கலைகழகத்தில் நடந்த அசம்பாவிதம் !

பாதுகாப்பு கமராக்களை செயழிலக்க செய்து கொள்ளை ! பல்கலைகழகத்தில் நடந்த அசம்பாவிதம் !

மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து பாதுகாப்பு கமராக்களை செயலிழக்கச் செய்து மின் உபகரணங்களை திருடிய இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சந்தேகநபர்கள் பாதுகாப்பு கமராக்களை செயலிழக்கச் செய்துவிட்டு அங்கிருந்த அறையொன்றிற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments