மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்தை மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் போதைப்பொருள் விநியோகித்த மாணவன் மற்றும் நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மில்லினிய பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.