Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட மகிழ்ச்சி செய்தி

பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட மகிழ்ச்சி செய்தி

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொசவ் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களின் விலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே உணவு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், தற்போதைய விலையை விட குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடியுமாயின் வழங்குமாறும் அமைச்சர் கோரியுள்ளார். பொதுமக்களுக்கு என்று சலுகை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments