நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்காணல் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு தவிர்க்க முடியாத காரணங்களால் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரத்தினம் தெரிவித்துள்ளார்.
நாளையும் (23ஆம் திகதி) நாளை மறுதினமும் (24ஆம் திகதி) நடைபெறவிருந்த மேற்படி நேர்காணலுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.