Friday, March 29, 2024
Homeஇந்திய செய்திகள்நீதிமன்றில் வைத்து மனைவியின் கழுத்தை வெட்டி கொன்ற கணவன்! : வெளியான காரணம்!

நீதிமன்றில் வைத்து மனைவியின் கழுத்தை வெட்டி கொன்ற கணவன்! : வெளியான காரணம்!

இந்­தி­யாவின் பெங்­க­ளூரு நகரில் நீதி­மன்­றத்தில் வைத்து தனது மனை­வியின் கழுத்தை கத்­தியால் வெட்­டிய சம்­பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவா­க­ரத்துக் கோரிக்­கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்­ம­தித்­தி­ருந்த நிலையில் இத்­தாக்தல் நடந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.

சிவ­கு­மாரும் அவரின் மனைவி சித்­ராவும் 7 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்­து விவா­க­ரத்து செய்­வ­தற்கு இவர்கள் மனுத்­தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

இவர்­களை உள­வள ஆலோ­சனை சேவை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­மாறு நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­யது.

இதன்­படி, பெங்­க­ளூரு ஹோலே­ந­ர­சி­புர குடும்ப நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற ஒரு மணித்­தி­யால ஆலோ­சனை நிகழ்வில் இத்­தம்­ப­தியர் பங்­கு­பற்­றினர்.

இதன்­போது இவர்கள் தமக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை களைந்­து­விட்டு இணைந்து வாழ்­வற்கு அவர்கள் சம்­ம­தித்­துள்ளனர்.

எனினும் இந்­நி­கழ்வின் பின் வெளியே வந்த சித்ரா, கழி­வறை நோக்கி நடந்­த­போது பின்­தொ­டர்ந்து சென்ற சிவ­குமார் அப்­பெண்ணை கழுத்தை கத்­தியால் வெட்­டி­யுள்ளார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அங்­கி­ருந்து சிவ­குமார் தப்­பி­யோட முயன்­ற­போ­திலும் அரு­கி­லி­ருந்­த­வர்கள் அவரை பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சம்பவத்தில் அதி­க­ளவு இரத்தம் வெளி­யே­றி­யி­ருந்­ததால் சிகிச்­சை­ பலனின்றி சித்ரா உயி­ரி­ழந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments