பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீடு நேற்று (02) முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மின்சார சபையை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாததே இதற்கு காரணம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணத் தொகை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் ரூபா என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
வத்தளை அவெரிவத் எட்வர்ட் ஒழுங்கையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீடு துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.