ஊழல் எதிர்ப்பு முன்னணியின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நாமல் குமாரவை நாற்காலியில் கட்டி வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பெண் ஒருவர் வரகாபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் குமார கைது செய்யப்பட்டு வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.