பல்லுயிர்ச் செயலகத்தின் கூற்றுப்படி, நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.
2021 ரெட் டேட்டா புக் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக செயலகத்தின் இயக்குநர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.
244 வகையான பறவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த பறவை இனங்களை பாதுகாக்கும் பொறுப்பை முழு சமூகமும் ஏற்க வேண்டும் என்று பத்மா அபேகோன் வலியுறுத்தினார்.