Tuesday, April 16, 2024
Homeஇலங்கை செய்திகள்நாடு திரும்புகிறார் பசில் ராஜபக்ச : வெளியான விபரம்!

நாடு திரும்புகிறார் பசில் ராஜபக்ச : வெளியான விபரம்!

வெளிநாட்டில் உள்ள பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வந்து கட்சியை வழிநடத்துவார் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை கிருதலே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைவராக இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments