தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நேற்று (14)பகல் அப் பகுதியில் ஆற்றில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முனைக்காடு பெரியகளப்பு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தம்பிலு வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 6 பேர் முனைக்காடு ஆற்றுக்குச் சென்று அங்கு உணவு சமைத்து மது அருந்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளனர்.
அப்போது சடலமாக மீட்கப்பட்டவர் அருகில் சென்று வெற்றிலையை வாயில் போட்டுவிட்டு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் நேற்று ஆற்றில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சடலத்தை கரைக்கு இழுத்துச் சென்ற பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.