Thursday, April 18, 2024
Homeஇலங்கை செய்திகள்நடுரோட்டில் மது அருந்தி அட்டகாசம் செய்த அரச உத்தியோகஸ்தர்கள் கைது!

நடுரோட்டில் மது அருந்தி அட்டகாசம் செய்த அரச உத்தியோகஸ்தர்கள் கைது!

நடுரோட்டில் மது அருந்தி அட்டகாசம் செய்த அரச உத்தியோகஸ்தர்கள் கைது!

குடிபோதையில் சாலையில் சென்ற 3 பொலிஸாரை தாக்கிய மருத்துவர், பொறியாளர், வங்கி அதிகாரி மற்றும் தொழிலதிபர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாதேகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர், தனியார் வங்கியொன்றின் அதிகாரி, பொறியியலாளர் மற்றும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் சந்தேகநபர்களில் ஒருவர் வெளிநாடு செல்லவிருந்த அவர்களில் ஒருவரது நண்பர் ஏற்பாடு செய்திருந்த மது விருந்தில் கலந்து கொண்டு முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பொலிஸார் முச்சக்கரவண்டியை சோதனைக்காக நிறுத்திய போது பொறியியலாளர் என கூறப்படும் நபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பொலிஸாரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அவர்கள் மதுபோதையில் இருப்பதை அறிந்த பொலிசார் விடயத்தை அலட்சியப்படுத்தியதோடு முச்சக்கரவண்டியில் இருந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை கேட்டுள்ளனர்.

ஆனால் முச்சக்கரவண்டியில் வந்த நால்வரும் இதற்கு ஒத்துழைக்காமல் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், முடிந்தால் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினரை சவால் விடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments