Thursday, April 18, 2024
Homeஇலங்கை செய்திகள்துரித உணவுகளின் விலை அதிகரிப்பு - இலங்கையர்கள் இடையே ஏற்பட்ட மாற்றம்..!

துரித உணவுகளின் விலை அதிகரிப்பு – இலங்கையர்கள் இடையே ஏற்பட்ட மாற்றம்..!

சந்தையில் துரித உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சிறுவர்கள் துரித உணவுகளை உட்கொள்வது குறைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

துரித உணவுகளை உட்கொள்வது குறைந்துள்ள அதேவேளை, நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments