இன்று காலை பதுளை வசந்தவெளியில் இருந்து பதுளை நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று வசந்தவெளி செல்லும் வழியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் கருத்தரங்கு ஒன்றிற்காக குறித்த பேருந்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.