கருவலகஸ்வெவ, 7ஆம் மைல் கல் பகுதியில் காட்டு யானையொன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் மிருகங்களை வேட்டையாடுபவர்களால் இவ்வாறு யானை மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
காயமடைந்த யானைக்கு கருவலகஸ்வெவ பிரதேச வன அதிகாரிகள் மற்றும் அனுராதபுரம் கால்நடை வைத்திய காரியாலயத்தின் வைத்தியர் இசுரு ஹேவகோட்டகேவினால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யானையின் தலையில் சுமார் 9 தோட்டாக்கள் தாக்கியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுமார் 25 வயது கொண்ட குறித்த யானையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர் தெரிவித்தார்.