மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரியொன்றின் மாணவிகள் 40 பேர் திடீரென சுகவீனமடைந்து மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்கிழமை) அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் இந்த மாணவர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.