இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக கர்நாடகாவின் ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
இதனிடையே அங்கு நடைபெற்ற வரவேற்பறையில் நடனமாடிக்கொண்டிருந்த ஜோஸ்னா லூயிஸ் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜோஸ்னாவை பரிசோதித்த டாக்டர்கள், திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளம்பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.