Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்திருகோணமலையில் யுவதியொருவர் எடுத்த தவறான முடிவு !

திருகோணமலையில் யுவதியொருவர் எடுத்த தவறான முடிவு !

திருகோணமலையில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் நேற்று (27.11.2022) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

தான் காதலித்து வந்த இளைஞனுக்கு உடல்நிலை சரியில்லை என தாய் தனது மகளுக்கு தெரிவித்ததையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனந்த விநாயகர் வீதியில் வசிக்கும் சிவகுமார் கீர்த்தனா (வயது 18) என்பவரே இந்த தவறான முடிவை எடுத்துள்ளார்.

சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments