Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்திடீர் சுகயீனமடைந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!

திடீர் சுகயீனமடைந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு காய்ச்சல், வயிற்றில் கோளாறு, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் இருந்ததாலேயே அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரியவருகிறது.

அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என்றும் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments