தேசிய அட்டை பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி புதிய தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான 100 ரூபா கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய அடையாள அட்டையை மீளப் பெறுவதற்கு இதுவரை அறிவிக்கப்பட்ட 250 ரூபா கட்டணம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.