ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் தனது மனைவி யுவராணி, மகன் சஞ்சய் மற்றும் மகள் தர்ஷினி ஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார்.
புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக யுவராணி பணியாற்றி வந்தார். யுவராணி தனது மகன் சஞ்சய் சரிவரை படிக்கவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு வீட்டுக்கு வந்த சஞ்சய்யை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அருள்செல்வன் வெளியே சென்றபோது, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலையில் குழிவான கருங்கல்லை வைத்துவிட்டு சஞ்சய் ஓடினார்.
இதில் பலத்த காயமடைந்த யுவராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் யுவராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சிறுவன் சஞ்சாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.