Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்தாதியின் கையை வெட்டி கைப்பையை திருடிய நபர்கள்!

தாதியின் கையை வெட்டி கைப்பையை திருடிய நபர்கள்!

செவிலியர் ஒருவர் தனது கடமையை முடித்துக்கொண்டு பேருந்திற்காக காத்திருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாதியின் கையை கத்தியால் வெட்டி கைப்பையை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவருக்கு இது நேர்ந்துள்ளது.

நிடம்புவ தலைமையக பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த தாதி வட்டுபிட்டியால வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நிடம்புவ தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தாதியின் கணவர் பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் நிடம்புவ பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments