தனது தம்பியை தாக்கிய வகுப்பாசிரியரை மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் சென்று தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியரும் மாணவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரால் தனது இளைய சகோதரர் தாக்கப்படுவதை அறிந்த அவரது சகோதரர் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை நாற்காலியை தூக்கி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.