Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு ஓட்டம்!

தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு ஓட்டம்!

திருகோணமலை – 2ம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய தாய்,22 மற்றும் 26 வயதுடைய இரு மகன்கள் மற்றும் 19 வயதுடைய மகள் ஆகிய 4 பேரும் அகதிகளாக இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று (13) அதிகாலை ராமேஸ்வரம் வந்திறங்கியதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன. ராமேஸ்வரம் சென்ற அவர்கள் தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு

அங்கு மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்து ள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தெரிவித்தனர்.

அதோடு, தாங்கள் நால்வரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

அதேவேளை இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தமிழகத்திற்கு டடக்கலம் தேடிச்சென்றோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments