திஸ்ஸமஹாராம நகரில் பிச்சைக் கிண்ணத்தை ஏந்தி நன்கொடை சேகரிக்கும் பிக்கு ஒருவர், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக தனது விகாரைக்கு நன்கொடை கிடைக்கவில்லை எனக் கூறி வர்த்தக நிலையமொன்றுக்குச் சென்று அங்கிருந்த பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
45,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி காணாமல் போயுள்ளதாக வர்த்தகர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பிக்குவை கைது செய்த பொலிசார் பிக்குவிடம் இருந்து காணாமல் போன செல்போனை மீட்டுள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிக்கு தனமல்வில பிரதேச விகாரையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். பிகு நேற்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.