Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் !

தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் !

பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மீது ஒரு பெண் தன்னிச்சையான பாலியல் வன்கொடுமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனுஷ்க குணதிலக்கிற்கு எதிராக சிட்னியில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உட்பட 04 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

31 வயதான தனுஷ்க குணதிலக் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் சசெக்ஸ் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் உள்ள பெரமடா நீதிமன்றம் குணதிலக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் அவர் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments