இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது . இதன் காரணமாக அவரை விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தில் இன்று தடுப்பு மையத்தில் இருந்து வீடியோ தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பெண்ணை தன்னிச்சையாக பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனுஷ்க குணதிலக்கிற்கு எதிராக சிட்னியில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உட்பட 04 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
31 வயதான தனுஷ்க குணதிலக் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் சசெக்ஸ் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியில் உள்ள பெடரல் நீதிமன்றம் நேற்று குணதிலக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்ததால், வீடியோ தொழில்நுட்பம் மூலம் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.