Tuesday, March 19, 2024
Homeஇந்திய செய்திகள்தனது காதலை ஏற்க மறுத்த மகள்! துடிதுடிக்க கொலை செய்த சித்தப்பா !

தனது காதலை ஏற்க மறுத்த மகள்! துடிதுடிக்க கொலை செய்த சித்தப்பா !

கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, தொந்தரவு செய்த சித்தப்பா இறுதியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (21), கருப்பையா மகன் துரைக்கண்ணு (36) என்பவரை சித்தப்பா என்ற போர்வையில் காதலித்து வந்துள்ளார்.

குறித்த நபர் காதல் உறவுமுறைகளை மீறியதாக வீட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பவித்ராவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த துரைக்கண்ணு, பவித்ராவை திருமணம் செய்து கொள்ளும்படி சித்ரவதை செய்ய, சிறுமி மறுத்து சத்தம் போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த துரைக்கண்ணு, கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்ததில், மயங்கி விழுந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் துரைக்கண்ணு தனது வீட்டிற்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments