ஜனாதிபதி வசமாகும் முக்கிய அமைச்சுக்களின் பொறுப்புகள்! வெளியானது அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நான்கு அமைச்சுப் பொறுப்புகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள், தொழில்நுட்பம், பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.