மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மானவ நாயக். நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து கார் புறப்பட்டதும், கார் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டினார். இதைப் பார்த்த நடிகை, டிரைவரிடம் செல்போனில் பேசுவதை நிறுத்தச் சொன்னார்.
இதனால் கோபமடைந்த டிரைவர் காரை அதிவேகமாக ஓட்டி நடிகையிடம் மரண பயத்தை காட்டியுள்ளார். எங்கும் நிற்காமல் சென்றதால் பயந்துபோன நடிகை மானவா, உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செல்போனில் அழைத்து புகார் அளித்துள்ளார்.
ஆனால் ஓட்டுநர், மானவ நாயக் செல்லும் இடத்திற்குச் செல்லாமல், பாதையை மாற்றிவிட்டு வேகமாகச் சென்றார்.
பின்னர், காரில் இருந்த நடிகை அலறியடித்ததையடுத்து, காரை பின்தொடர்ந்த போக்குவரத்து போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். காரை மறித்து டிரைவரை கைது செய்தனர்.