இலங்கையில் குரங்குகளுக்கு சீனாவில் அதிக தேவை இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு தீர்வாக இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையில் உள்ள ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
இவ்வாறான நிலையில் இலங்கை குரங்குகள் சீனாவுக்கு செல்வது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கை குரங்குகள் விமான நிலையத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டு விமானத்தில் பயணிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.