சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருபது வருடங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரின் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 10 பேர் இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.