இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர் ஏனென்றால் ..
மத்திய பிரதேச மாநிலம் கட்னியில் ஒரு சாய்பாபா கோயில் இயங்கி வருகிறது.. இது சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு போவார்கள் அந்த வகையில் ராஜேஷ் மேஹானி என்ற இளைஞர், சாய்பாபாவை தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்துள்ளார்..
கட்னி மாவட்டத்தை சேர்த்த இவர் அங்கு மெடிக்கல் ஷாப் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார்
இவர் சிறு வயது முதல் வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோவிலுக்கு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் .
இந்நிலையில் 1 ஆம் தேதி சாய் அப்பா கோவிலுக்கு சென்ற பொது 15 நிமிடங்களுக்கு மேல் மண்டியிட்டு பாபா வை வணங்கிய படியே அமர்ந்துள்ளார்.
மூச்சுபேச்சில்லாமல் முழங்காலிட்டபடியே ராஜேஷ் உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. அவரது தோளை தொட்டு உலுக்கி எழுப்பியபோது, ராஜேஷ் மெல்ல சரிந்து சரிந்து கீழே விழுந்தார்.. இதை பார்த்து பதறிப்போன கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும், இதனால் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, அதில் ராஜேஷையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.. ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. சாய்பாபாவை வணங்கும்போதே ராஜேஷின் உடல் பிரிந்துள்ளது..