இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் அண்மையில் நடைபெற்ற ரிட்ஸ்பரி அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான டென்னிஸ் சுற்றில் பெண்களுக்கான சிவப்பு பந்து பிரிவில் யாழ். இந்து தொடக்கப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
மேற்படி பிரிவில் களுத்துறை மகளிர் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் கொழும்பு விசாகா வித்தியாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றன. சிவப்பு பந்து சிறுவர்கள் பிரிவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
ஆண்களுக்கான பச்சை பந்து பிரிவில் குருநாகல் மலியதேவ கல்லூரி 2ஆம் இடத்தையும், கல்கிசை சென் தோமஸ் 3ஆம் இடத்தையும், பெண்களுக்கான பச்சை பந்து பிரிவில் கொழும்பு விசாகா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தையும், கொழும்பு மியூசியஸ் கல்லூரி 2ஆம் இடத்தையும், 2ஆம் இடத்தையும் பெற்றன. களுத்துறை பெண்கள் மகா வித்தியாலயம் 3ம் இடத்தைப் பெற்றது.
சிறுவர்களுக்கான சிவப்பு மஞ்சள் பந்து பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரி சம்பியனாகியது.
பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி 2ஆம் இடத்தையும் கொழும்பு நாலந்தா கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.
பெண்களுக்கான சிவப்பு பந்து பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரி சம்பியனாகவும், விசாகா வித்தியாலயம் 2ஆம் இடத்தையும், சென் ஜோன்ஸ் பெண்கள் கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போட்டி நடத்தப்பட்டது, இது கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் நிறுத்தப்பட்டது.
நாடு முழுவதிலுமிருந்து 121 பாடசாலை அணிகளைச் சேர்ந்த 1210 மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.