2021 உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக அனுமதி கட் ஆஃப் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வெட்டுப்புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இந்த வருடத்தில் 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் admission.ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் உள்நுழைந்து தமது வெட்டுப்புள்ளியை அறிந்துகொள்ள முடியும்.