Tuesday, April 16, 2024
Homeஇலங்கை செய்திகள்சட்டவிரோதமாக 120 ஆடுகளை கடத்திச் சென்ற 8 பேர் கந்தளாயில் கைது !

சட்டவிரோதமாக 120 ஆடுகளை கடத்திச் சென்ற 8 பேர் கந்தளாயில் கைது !

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி 120 ஆடுகளை கொண்டு சென்ற ஐந்து பேரை இன்று (20) அதிகாலை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருணாகல்,கொழும்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்களை இவ்வாறு 120 ஆடுகளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மூன்று லொறிகளில் கிண்ணியா,வான்எல,தோப்பூர் மற்றும் கந்தளாய் போன்ற பகுதிகலிருந்து மூன்று லொறிகளில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு போதே அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 120 ஆடுகளுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் ஆடுகளை கொண்டு செல்ல பயன்படுத்திய மூன்று லொறிகளும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார். தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments