Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்சகோதரியின் கணவரால் மாணவியான சிறுமிக்கு நேர்ந்த அவலம் !

சகோதரியின் கணவரால் மாணவியான சிறுமிக்கு நேர்ந்த அவலம் !

தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை (04-11-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை(27) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் ற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் மாணவியின் பெற்றோர் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் மாணவியின் மூத்த சகோதரியின் கணவர் சிறுமியை தாராபுரம் கிராமத்தில் உள்ள பிறிதொரு வீட்டில் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மாணவி தடுத்து வைக்கப்பட்ட வீட்டிற்கு இருவர் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களின் பின்னர் மாணவி வீடு சென்ற நிலையில்,வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது தனது சகோதரியின் கணவரால் தான் தடுத்து வைக்கப்பட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட தாகவும்,மேலும் இருவர் உடந்தையாக இருந்தமையை சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தடவைகள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் சகோதரியின் கணவர் மற்றும் ஏனைய இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவர் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (28) முன்னிலையானார். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments