இன்று முதல் கொழும்பைச் சுற்றி போராட்டம் நடத்தப்படும் என அறியப்படுகிறது.
அதன்படி கொழும்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக குழுக்களுடன் இணைந்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு மற்றும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படும்.
இந்த நிலையில், கொழும்பு நகருக்குள் பிரவேசித்து மேற்படி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.