Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் ஆரம்பமானது போராட்டம்! மக்களுடன் கைகோர்த்த அரசியல் கட்சிகள்!

கொழும்பில் ஆரம்பமானது போராட்டம்! மக்களுடன் கைகோர்த்த அரசியல் கட்சிகள்!

கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் தற்போது மருதானை தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

அரசின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

போராட்டம் காரணமாக மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெற்று முகப் போராட்டக் குழு ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, கொழும்பில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத் தடுப்புப் பிரிவினர், பொலிசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments