Tuesday, March 19, 2024
Homeஇந்திய செய்திகள்குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் இறந்துவிட்டதால், இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

முதல் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் சரண்யா (வயது 23) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் எம்ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் சரண்யா கடந்த 11ம் தேதி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சரண்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து சரண்யாவின் சகோதரி கார்த்திகா அளித்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை அருகே உள்ள அஞ்சகரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அருண் என்பவரை சரண்யா காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சரண்யாவிடம் அருண் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து தற்கொலைக்கு முயன்றார். இதை அவர் தனது சகோதரி கார்த்திகாவிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.

கார்த்திகா கொடுத்த தகவலின் பேரில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி சரண்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கார்த்திகாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சரண்யா குளிர்பானத்தில் எலி விஷத்தை கலந்து செல்போனில் வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

மேலும் அந்த வீடியோவில், “சாரி மாமா, நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன், கண்டிப்பா வரமாட்டேன், அப்படியே போய் சேருறேன்.” சந்தோசமா இருங்க மாமா, அம்மாவை பார்த்துக்கோங்க. நான் உன் பாட்டுக்கு பேசினேன் உனக்கு புரியாமல் நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று புரிய வைத்தேன். நான் எல்லாம் கத்தினேன். சரி, சந்தோஷமாக இரு, இனி உன் வாழ்க்கையில் நான் இல்லை, நான் போய் உன்னுடன் சேர்ந்து கொள்கிறேன்” என்று தனது காதலனுக்கு வீடியோ அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments