Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்குளவி கொட்டுக்கு இலக்காகி 17 பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 பாடசாலை மாணவர்கள் பாதிப்பு!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி றோயல் கல்லூரியின் 17 மாணவர்கள் குளவி கடித்ததில் 28.11.2022 பிற்பகல் 2.30 மணியளவில் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த பகுதியில் உள்ள மரமொன்றில் காணப்பட்ட குளவி கூடு ஒன்று மாணவர்கள் பாடசாலையில் சென்று கொண்டிருந்த போது கலைந்து சென்று தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டிய மாணவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments