Thursday, April 25, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சி மருத்துவர் பிரியாந்தினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்!

கிளிநொச்சி மருத்துவர் பிரியாந்தினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்!

கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கமலாசிங்கவிற்கு எதிராக பிரதேச மக்களால் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது மது அருந்திவிட்டு மருத்துவம் பார்க்காதே, வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை அவமதிக்காதே, வெளியேறு, வெளியேறு, விடுதியை விட்டு வெளியேறு, தரம்தாழ்த்தாதே, தரம் தாழ்த்தாதே, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே, என்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமல், போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததோடு, மீண்டும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கருத்து தெரிவிக்கையில், கர்ப்பிணி தாய்மார்களிடம் மிகவும் மோசமான வார்த்தைகளை பிரயோகிப்பது, தாதிகளுடன் முரண்படுவது என பல குறைபாடுகள் காணப்பட்டன.

போதைக்கு அடிமையானவரிடம் இருந்து எப்படி சிகிச்சை பெறுவது? போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை, கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த வைத்தியர் பிரியந்தினி கமலாசிங்கம் உள்ளக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments