Saturday, April 20, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சி மக்களுக்கு சோறு போட்ட சுமந்திரன் எம்.பி!

கிளிநொச்சி மக்களுக்கு சோறு போட்ட சுமந்திரன் எம்.பி!

பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 2023 பட்ஜெட்டில் எதுவும் இல்லை. பாதுகாப்பு தரப்பினருக்கான வரவு செலவுத் திட்டம் இதுவாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உமையாள்புரம் சோலைநகர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசு, மக்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

பாதுகாப்புத் துறைக்கு நிறைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இயற்கை சீற்றம் அல்லது பேரிடர் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்த பட்ஜெட் திட்டமாகவே பார்க்கிறோம். பல்வேறு அமைப்புகளின் உதவியை நாடி எங்களால் முடிந்த அளவு மக்களுக்கு உதவி செய்து வருகிறோம், என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments