கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் என்ற 21 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்புகள் பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இளைஞரின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.