கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டினுள் நுழைந்த நபர்கள் தவகுமார் சுரேஸ் என்ற 26 வயதுடைய இளைஞரை கத்தியால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.