கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் வீடு புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
17 பவுன் தங்க நகைகள், 2 இலட்சம் ரூபா பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் தனியாக இருந்த வயோதிப கணவன், மனைவி இருவரையும் தாக்கி கை கால்களை கட்டிவிட்டு பணம், நகைகள் எங்கே என்று கேட்டுள்ளனர்.
மனைவி கழுத்தில் கிடந்த செயினையும், கையில் இருந்த பையையும் கழற்றியபோது தாலிக்கொடி எங்கே என்று கேட்டு மீண்டும் தாக்கியுள்ளனர்.
தப்பிச் செல்லும் போது கையடக்கத் தொலைபேசிகளையும் எடுத்துக் கொண்டு வீட்டின் உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.