Tuesday, April 16, 2024
Homeஇலங்கை செய்திகள்கிளிநொச்சியில் வழிப்பறி செய்த நகையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது!

கிளிநொச்சியில் வழிப்பறி செய்த நகையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை ஒன்றில் தங்க வளையல் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட கொள்ளையர்கள் இருவர் நகைக்கடை உரிமையாளரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் யாழ்.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சென்ற இருவர் நகையை விற்க முற்பட்டுள்ளனர். எனினும் இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த நகைக்கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு இரகசியமாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.

பின்னர் கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க வளையலை திருடிய இரண்டு குறட்பாக்களே இவ்வாறு தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து திருடப்பட்ட நகைகளை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments