பாடசாலை மாணவர் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தக பையில் கஞ்சா கலந்த மாவா சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, மாவட்ட ஒழுக்காற்று அபிவிருத்தி குழு மற்றும் பொலிஸார் இணைந்து இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மாணவி ஒருவரிடமிருந்து கஞ்சா கலந்த மாவா பாக்கு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று மாணவர்களிடமிருந்து புகையிலை மற்றும் சுண்ணாம்பு மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தென்னிலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், குறித்த பாடசாலை மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.