Saturday, April 20, 2024
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் நிறை மாத கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவன்! வெளியான அதிர்ச்சி காரணம் !

கிளிநொச்சியில் நிறை மாத கர்ப்பிணி மனைவியை சுட்ட கணவன்! வெளியான அதிர்ச்சி காரணம் !

கிளிநொச்சியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (11-04-2023) கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு:

குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி மீது இந்திய துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

காயமடைந்த மனைவி மூன்று மாத கர்ப்பிணி என்பதுடன், சம்பவம் தொடர்பில் கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments